Monday 19 July 2010

ஹைப்பர் டென்ஷன் வரும்போது என்ன செய்யலாம்????



நம் அன்றாட வாழ்வில் டென்ஷன் என்பது சகஜமான ஒன்று.
நாம் நிம்மதியாக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள கூட்டம் நம்மை நிம்மதியாக இருக்க விடாது.

உறவினர், நண்பர், சீனியர், ஜூனியர், முன்பரிச்சியமில்லாதவர், முதலாளி, தொழிலாளி.... என எந்த உருவத்திலும் ரூபமெடுத்து நம்மைத் தொல்லைப்படுத்த வரலாம். சகிப்பதைத் தவிர நமக்கு வேறொன்றும் மார்க்கம் இல்லை.

இந்த டென்சன் எதனால் வருகின்றது. மனம் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறும் போது...

மனது தடுமாறும் போது....வார்த்தைகள் தடுமாறும்... வார்த்தைகள் தடுமாறும்போது... நமது நார்மல் பழக்க வழக்கங்கள் தடுமாறும்.

சரி.. இவையெல்லாம் ஏன் தடுமாறுகின்றன. நமக்குப் பிடிக்காத... நம்மால் ஜீரணிக்க முடியாத... நம்மால் சகித்துக் கொள்ள முடியாத நிகழ்வுகள்... நம்மில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் போது...

ஆனால்... இந்த நிகழ்வுகளைக் கண்டு... அயர்ந்து போகாமல்.. அவைகளை ஏற்றுக் கொண்டு... தாங்கிக் கொண்டு.... முன் செல்லும் ஒரு பக்குவ நிலைமையை மனம் அடைய வேண்டும். இதை அனைவரும் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். (ப்ளீஸ் நோட் தி பாயிண்ட்).

ஒரு கதவு அடையும்பொழுது... மற்றொரு கதவு திறக்கும் என்பது பெரியோர்கள் சொன்னது.

சகிப்புத்தன்மை மனிதனுக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம்.

நோய்கள் மிகுந்த உலகில், அதற்கான மருந்துகளையும், அதைக் கண்டு பிடிக்கும் திறனையும் இறைவன் நமக்குத் தந்திருக்கிறான்.

இந்த நேரத்தில் இணையத்தைக் கண்டு பிடித்த மனிதனுக்கு இரு கரம் கூப்பி நன்றி செலுத்துகிறேன்.

ஏனெனில், எனது ஹைப்பர் டென்சனுக்கு... நான் மருத்துவரை நாடுவதில்லை.

இணையமே எனது மருத்துவமனை, மருந்தகம், மருந்து எல்லாம்.

இது போன்ற சமயங்களில் எனது டென்சனைக் குறைப்பதற்காக நான் பார்க்கும் சில தளங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நீங்களும் பார்த்துப், படித்து டென்சனைக் குறைத்துக் கொள்ளலாம்.

இதற்கு யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம், டயட், ஆன்மிகம், போன்ற உடலை நோக வைக்கும் எந்தப் பயிற்சியும் தேவையில்லை. மருந்து, மருத்துவர், போன்ற செலவுகளும் இல்லை.

இந்தத் தளங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு, எனக்கு வாழ்வில் எந்த சோதனை வந்தாலும் எதிர் கொள்ளும் சக்தி , இடி விழுந்தாலும் தாங்கும் திறன், எதையும் தாங்கும் இதயம்... என நெஞ்சுறுதி கூடி விட்டது. (????)